அம்பேத்கர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் சட்ட அமைச்சராக பதவியேற்றார். இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் ஆவார். பட்டியலின மக்களுக்காக கழகம் ஒன்றை தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவர். இவரை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுவார்கள்.
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அவரது திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அம்பேத்கரின் நினைவுதினத்தை ஒட்டி பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
RECENT POSTS
- தமிழக அரசின் TNJFU பல்கலைக்கழக வேலை வாய்ப்புகள் | ஈஸியா உங்க E-Mail ஐடில அப்ளை பண்ணுங்க! மாதம் ரூ.20000 அரசு சம்பளம் வாங்கலாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
- 08th, MBBS Candidates Jobs in DHS Tiruvarur Recruitment 2023 | Apply Now At tiruvarur.nic.in
- Your Career Jobs for DHS Virudhunagar Recruitment 2023 Monthly Salary Rs.8500-60000 At virudhunagar.nic.in
- 54 Vacancies Jobs Opening for DHS Vellore Recruitment 2023 | Salary Rs.8500-60000/- Per Month @ vellore.nic.in
- Advance Your Career with Technical Analyst Job at Spices Board of India Recruitment 2023 | Download Application Form Here…