வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் 850 சிறப்பு பஸ்கள் இயக்கம்..!

வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக 850 சிறப்பு பஸ்கள் 25ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலமாக பக்கதர்களின் வசதிக்காக சென்னை, பெங்களூர், தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

850 special buses run in Tamil Nadu on the occasion of Velankanni festival red it now

மேலும் , தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு மொத்தம் 850 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்பிறகு , தொலைதூரங்களில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் முன்பதிவு செய்து, வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

Also Read : வெற்றிகரமாக விண்ணில் தரையிறக்கப்பட்ட சந்திராயன் 3..! அடுத்த 14 நாட்கள் விண்ணில் நடக்கப் போவது என்ன?

இதனிடையே, ஒப்பந்தம் அடிபப்டையில் குழுவாக பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், இந்த சேவை வேளாங்கண்ணிக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.