என்ஜினீயரிங் படிப்பில் சேருபவர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்தாச்சி! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

A good news for engineering students! Anna University Notification-Engineering Student First Year Class Announcement

தமிழகத்தில், 12-வது முடித்தவர்கள் என்ஜினீயரிங் படிப்புக்களுக்காக விண்ணப்பித்திருந்தன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி என்ஜினீயரிங் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நடைபெற்றது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு மொத்தம் 4 சுற்றுகளாக நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், 3 சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 446 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 533 இடங்கள் உள்ள நிலையில் 3 சுற்று கலந்தாய்வுக்கு பின் இதுவரை 58 ஆயிரத்து 307 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. என்ஜினீயரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, என்ஜினீயரிங் படிப்புக்கான 4-வது சுற்று கலந்தாய்வுக்கு மொத்தம் 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அதற்கான கால அவகாசமும் (கடந்த மாதம் 29, 30, 31 ) வழங்கப்பட்டது. இறுதியில், 36 ஆயிரத்து 57 பேருக்கு என்ஜினீயரிங் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் வரும் 28-ம் தேதி முதல் தொடங்கும் எனவும் அதற்கான அறிமுக வகுப்புகளை வரும் 14 ஆம் தேதியே நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here