திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு பொங்கல் கருணைகொடையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருக்கோயில்களில் மேம்பாட்டிற்கும், திருக்கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போது அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூபாய் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2023 முதல் அகவிலைப்படியை 34% விழுக்காட்டில் இருந்து 38 விழுக்காடாக உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.இதன் மூலம் சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் இதனால் ஆண்டொன்றுக்கு ரூபாய் 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.
மேலும் அரசு பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவது போல் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி, பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூபாய் 2000 ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணை கொடை இவ்வாண்டில் ரூபாய் 3000 ஆக உயர்த்தி வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL
- தமிழக அரசின் SIMCO சங்கத்தில் புதியதோர் வேலை அறிவிப்பு! மாதம் ரூ.15800 முதல் ரூ.35500 வரை சம்பளம் வழங்கப்படும்!
- சிறந்த காதலர் தின வாழ்த்துக்கள்! கவிதைகள்! – Valentines Day Wishes in Tamil! Lovers Day Wishes in Tamil!
- Get Ready for the UPSC Recruitment 2023: Apply for Jobs in All Over India – Apply at upsc.gov.in…
- Don’t Miss Out on WBHRB Recruitment 2023: Apply Now for 146 Vacancies – A Chance to Earn Up to Rs.92,100/-PM…
- பத்தாவது (10th) படித்தவரா நீங்க? உங்களுக்குத்தான் ரயில் சக்கர தொழிற்சாலையில் 192 வேலைகள் அறிவிப்பு!