நாட்டில் சென்ற சில நாட்களில் எல்லாம் பல மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தென் கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்ததே என கூறப்படுகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் அதாவது மே 11 அன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதற்கு “மோக்கா புயல்”என பெயரிடப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இத மோக்கா புயலானது மேலும் அதி தீவிர புயலாக வலுபெற்றிருக்கிறது. அதனையடுத்து வானிலை ஆய்வு மையமானது வங்காள தேசம் வடக்கு மியான்மர் போன்ற பகுதிகளுக்கிடையே நாளைய தினத்தில் கரையை கடக்க விருப்பதாக அறிவித்துள்ளது.
இதனால் லேசானதிலிருந்து மிதமான மழை வரை தமிழகத்தினுடைய ஓரிரு பகுதிகளில் காணப்படக்கூடும். அதுவுமல்லாது நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மிதமான மழையாக அடுத்த மூன்று மணி நேரத்திற்கு பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையமானது கூறியிருக்கின்றது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ChatGPT பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒரே மாதத்தில் 1 பில்லியன் பயனார்களை ஈர்த்து சாதனை! வெளியான புதிய தகவல்…
- பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
- 12வது படிச்சவங்களா? விமானத்தில் பறந்துக்கிட்டே வேலைபார்க்கலாம்…
- திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த வாகனத்திற்கு அனுமதி கிடையாது!!