விவசாயிகளே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! இந்த பொருட்களையெல்லாம் மானிய விலையில் தராங்களாம்!

A good news for you farmers All these items are available at subsidized prices-Subsidized Prices To Formers

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக விவசாயத்திற்கு இலவச மின்சாரம், விளைவிக்கும் பொருட்களை விவசாயநிலங்களுக்கே சென்று நேரடி கொள்முதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்பொழுது கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் பொருட்களை வழங்க உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டமானது பட்டாபிராமபுரம், மாம்பாக்கம், பெரியகடம்பூர், கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம் மற்றும் வீரகநல்லுார் ஆகிய கிராமங்களில் உள்ள மொத்தம் 299 விவசாயிகளுக்கு வேளாண் துறையின் மூலம் மானிய விலையில், கடப்பாறை, மம்முட்டி, தாலம், 2 அரிவாள், ஒரு கலைக்கொத்தி ஆகிய பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதன் மொத்த மதிப்பானது ரூ.2,993 ஆகும். இதில் மானியமாக ரூ.1,460 வழங்கப்படும். மீதமுள்ள ரூ.1,533 திருத்தணி வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் செலுத்தி மேற்கண்ட விவசாய கருவிகளை பெற்று கொள்ளலாம்.

இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், மானிய விலையில் விவசாயிகள் கருவிகளை பெறுவதற்கு விவசாயிகள் வேளாண் உதவி அலுவலரிடம் விண்ணப்பம் பெற்று ஆன்லைன் மூலம், நிலத்தின் சர்வே, சிட்டா, அடங்கல், விவசாயி போட்டோ மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றிடன் விண்ணப்பிக்க வேண்டும். இதில், அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு அதிலிருந்து விவசாயிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here