தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் வருடந்தோறும் மே மாத விடுமுறையின்போது ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த கலந்தாய்வானது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும்.
அதனையடுத்து கடந்த மே 8 ஆம் தேதி சென்ற கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வானது நடைபெற இருந்தது. ஆனால் நிர்வாக காரணமாக அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றமானது மாறுதல் கலந்தாய்வுக் குறித்த தேதியானது பிறகு தெரிவிக்கப்படும் என கடந்த மே-4 அன்று உத்தரவிட்டது. ஆனால் பள்ளிக் கல்வித்துறையானது தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி என ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்தது.
இந்த சூழ்நிலைகளில் பள்ளிக்கல்வித்துறையானது ஒரு முக்கிய அறிவிப்பை அறிவித்திருக்கிறது. அதாவது வருகிற மே-15 ஆம் தேதியிலிருந்து 26 ஆம் தேதி வரை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்ததான கலந்தாய்வு நடத்தப்படுவதாக தெரிவித்திருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கனவே இந்த கலந்தாய்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் தற்காலிகமாக ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான புதிய தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!