தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை மக்கள் குறைந்த விலையில் வாங்கி வருகின்றனர். மக்கள் இந்த நியாய விலை கடையில் பொருட்களை வாங்குவதற்கு மிக முக்கிய ஆவணமாக இருப்பது ரேஷன் கார்டு.
ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் சரியான முறையில் வழங்கப்படவில்லை போன்ற பல்வேறு முறைகேடுகள் அதிகரித்து வருவதாக மக்கள் தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர். இத்தகைய செயல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசு ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது.
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தையும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதற்கு முன் இதற்கான கால அவகாசம் மார்ச் 31 முதல் இருந்த நிலையில் தற்பொழுது ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது. இந்த கால அவகாசம் முடிவதற்குள் மக்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இணைக்காத ரேஷன் கார்டுக்கு ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து அரிசி, கோதுமை போன்ற எந்த அத்தியாவசிய பொருளும் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க ரேஷன் கார்ட பத்திரமா வச்சுக்கோங்க..!
- மத்திய அரசாங்க வேலை செய்ய ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் வேலைவாய்ப்பு வெளியீடு!
- பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப முடிவு! AAICLAS லிமிடெட்டில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!
- நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை வந்துவிட்டது! RITES நிறுவனத்தில் புதியதோர் வேலை வெளியீடு!
- தமிழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு!