தனுஷ் நடித்து வெளியான “மாரி” படத்திலும், அஜித் நடித்து வெளியான “விஸ்வாசம்” போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வளம் வருபவர் ரோபோ சங்கர். இவர் முதலில் சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றவர். இவர் தன் குடும்பத்துடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். பல்வேறு செல்லப்பிராணிகளை வளர்த்து வரும் ரோபோசங்கர், பறவைகளையும் வளர்த்து வருகிறார். யூடியூப் சேனல் ஒன்றில் அவரது வீட்டில் வளர்க்கப்படும் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளின் வீடியோ ஒன்றும் வெளியானது.
இதையடுத்து அவரது வீட்டுக்கு சோதனை மேற்கொண்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வரும் கிளிகளை பறிமுதல் செய்து கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைந்தனர். வனத்துறை சட்டத்தின்படி பறவைகள் பாதுகாக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனுமதியின்றி வளர்த்ததால் கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வகையான கிளிகள் வீட்டில் வளர்க்க கூடாது என்பதாலும் மேலும், வனத்துறை அனுமதி இல்லாமல் கிளையை வளர்த்ததாலும் அந்த கிளிகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரோபோ சங்கரிடம் விசாரணை நடத்த வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
RECENT POSTS IN JOBSTAMIL
- தமிழ்நாடு ISRO நிறுவனத்தில் வேலை செய்ய ஆசையா? 10th, ITI, Diploma படித்த உங்களுக்குத்தான் இந்த வாய்ப்பு! மாதம் ரூ.142400 வரை சம்பளம்!
- TNPSC GROUP 4 தேர்வர்களே! மகிழ்ச்சியான செய்தி! குரூப் 4 ரிசல்ட் வந்தாச்சு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு @ tnpsc.gov.in
- நீங்க 12th தான் படிச்சிருக்கீங்களா? 200 பணியிடங்கள்! IGNOU பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி!
- முன் அனுபவம் இல்லாதவங்களுக்கு CMC வேலூரில் வேலை! மாதம் ரூ.120000 வரை சம்பளம்!
- ராகுல்காந்தி பதவிநீக்கம்..! இதுதான் காரணமா? மக்களவை செயலகத்தின் அதிரடி அறிவிப்பு!!