Today Latest News in Tamilnadu
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள், மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த்திருந்தார். சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது…
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசினார். அதற்கு பல்வேறு எதிர்ப்பு தெறிவித்து பா.ஜ.க தவறாக பரப்புரை செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பக்கமாக வருவதாலும், மொத்தம் 5 மாநிலங்களில் தேர்தலை கருத்தில் வைத்து, கியாஸ் சிலண்டர் விலை ரூ.200 என பா.ஜ.க அரசு தற்போது குறைத்துள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் மகத்தான வெற்றி பெறும். மக்கள் எல்லோரும் பா.ஜ.க மீது அதிருப்தியில் இருப்பதால் இந்த முறை படுதோல்வி தான் அடையும். என இவ்வாறு கூறியுள்ளார்.