தற்பொழுது உள்ள சூழ்நிலையில், விஞ்ஞான வளர்ச்சி என்பது வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் மெட்ரோ ரயில் நிவாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இனி மெட்ரோ ரயிலின் டிக்கெட்டை வாட்ஸ்-அப் மூலம் பெற்றுகொள்ளலாம் என்பதை அறிவித்தது.
இந்நிலையில், வாட்ஸ்-அப் மூலம் மெட்ரோ ரயிலின் டிக்கெட்டை பெரும் வசதியை பெங்களூருவில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு வெளியிடப்போவதாக நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரெயிலில் பயணிகள் வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்திருந்தது. இந்நிலையில், ராஜ்யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயிலில் பயணித்த சுமார் 1,669 பயணிகள் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் மேற்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் 14 ஆயிரத்து 400 பேர் புதிதாக வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் எடுத்து மெட்ரோ ரெயிலில் பயணிக்க இணைந்திருப்பதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
RECENT POSTS
- IIT மெட்ராஸில் சூப்பரான வேலை! மாதம் ரூ.40000 முதல் ரூ.60000 வரை சம்பளம் வழங்கப்படும் @ www.iitm.ac.in
- திருப்பதி செல்லும் பக்தர்களா நீங்க.. இதோ உங்களுக்காக சூப்பர் குட் நியூஸ்..!
- இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலை! விண்ணப்பிக்க ரெடியா?
- 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத போறீங்களா.. அப்ப இந்த செய்தி உங்களுக்குத்தான்..! உடனே பாருங்க…
- போச்சுடா..! பெண்கள் பேருல இது இருந்தாலும் மாசம் 1000 ரூபாய் கிடையாதாம்! வெளியான புது தகவல்!