
தமிழக சட்டசபையில் தரம் வாய்ந்த மருத்துவ சேவையை தமிழகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கும் வகையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கான உள்கட்டமைப்பு, கட்டிட வசதி மற்றும் மனித வளம் ஆகிய பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதனைத் தொடந்து, அவைகளின் முதல்கட்ட பணியை முடித்து தற்போது அவைகள் திறக்கப்பட இருக்கிறது. அதாவது மாநகராட்சிகளான சென்னையில் 140, மதுரையில் 46, கோவையில் 50, சேலம் 25, திருச்சி 25, திருப்பூர் 25 மற்றும் நகராட்சிகளில் 189 என்று மொத்தம் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை இன்று(செவ்வாய்) பொதுமக்களுடைய பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளன.
தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(செவ்வாய்) தேனாம்பேட்டையில் இருக்கும் 117-வது வார்டுக்குட்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை நேரடியாக திறக்கவுள்ளார். மேலும் முதல்வர் காணொலி காட்சி மூலமாக மீதம் இருக்கின்ற 499 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை திறக்கிறார். இம்மையங்கள் அனைத்தும் காலை 8 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரையும் மாலை 4 மணியிலிருந்து இரவு 8 மணி வரையும் செயல்பட இருக்கின்றது. அதுமட்டுமல்லாது பொதுமக்களுக்கான அத்தியாவசிய மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சேவைகளையும் இம்மையங்களில் மேற்கொள்ளப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை ரெடி? சீக்கிரமா அப்ளை பண்ணுங்க!
- அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விருப்பமா? வந்தாச்சு புதிய வேலை வாய்ப்பு! அப்ளை பண்ணிடலாம் வாங்க!
- தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா? பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம் வாங்க!
- மாதம் ரூ.90,000 முதல் ரூ.1,50,000/- வரை சம்பளம் வாங்கிடலாம் மத்திய அரசு வேலையில்! பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் புதிய வேலை அறிவிப்பு!
- 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்கும் வேலை வாய்ப்பு! தமிழ்நாட்டிலேயே வேலை செய்திடலாம்!