
பாக்கியலட்சுமி சீரியலில் பழனிசாமி நேற்று பாக்கியலட்சுமி வீட்டிற்கு வருகிறார். பாக்கியா மாமனாருடன் பேசிக்கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் கோபியும் இருக்கிறார். பழனிசாமி பாக்கியலட்சுமியை வெளியே செல்லலாம் என்று அழைக்கிறார். எதற்கு என்று பாக்கியா காரணம் கேட்க எதும் சொல்லாமல் மீண்டும் நீங்க வாங்க நான் சொல்கிறேன் என்கிறார். இதனால் கோபிக்கு கோபமாக வருகிறது. பாக்கியா மாமனாரிடம் அனுமதி வாங்கி வெளியே செல்லும் போது, பக்கியாவிடம் கோபி கேள்வி கேட்க வருகிறார். ராதிகா ஒரு முறை முறைத்தவுடன் கோபி பேசாமல் சென்று விடுகிறார். மேலும் தன் அப்பாவிடம் அவர்கள் எதுக்கு செல்கிறார்கள் நீங்கள் கேட்க மாட்டிங்களா என கோபி கேட்கும் போது, ராதிகா கோபமாக அங்கு வந்து உங்க வேலையை பாருங்க என்று திட்டி விட்டு செல்கிறார்.
அடுத்து பழனிசாமி, பாக்கியா இருவரும் ஏற்கனவே கான்ட்ராக்ட் எடுத்தவர்களை சந்தித்து திரும்ப தனக்கு தரும்படி ஒரு குறிப்பிட்ட விலைக்கு பேசி முடிகின்றன. அந்த பணத்தை எப்படி ரெடி செய்வது என பாக்கியா யோசித்து கொண்டிருக்கும் போது பழனிசாமி ஒரு ஐடியா கொடுக்கிறார். கவர்மேன்ட்லிருந்து அட்வான்ஸ் பணத்தை திரும்பி கேட்கலாம் என்று உடனே இருவரும் அங்கு சென்று கேட்கும் போது முடியாது என்று கான்ட்ராக்டர் மறுத்து விடுகிறார்.
Also Read >> இனி வாட்ஸ் அப்பிலும் AI யூஸ் பண்ணலாம்..! சற்றுமுன் வெளியான புதிய அப்டேட்!!
உடனே பழனிசாமி அந்த ஆபிஸின் AO விடம் பேசி பணத்தை கான்ட்ராக்டர் தருவதாக கூறிவிடுகிறார். அடுத்த வீட்டில் கோபி அவரது அம்மாவும் பேசி கொண்டிருக்கும் போது பாக்கியா, பழனிசாமியுடன் சென்றிருப்பதாக போட்டுக் கொடுக்கிறார். அதற்கு அவரது அம்மா பழனிசாமி தம்பி தான எதாவது வேலையாக போயிருப்பாங்க என்று கூறுகிறார். உடனே கோபிக்கு கோபம் வருகிறது. அமிர்தா அந்த இடத்திற்கு வந்து கான்ட்ராக்ட் விசியமாக சென்றிருப்பதாக கூறுகிறார். உடனே கோபி தன் அம்மாவிடம் நாம தான் அந்த வேலை வேண்டாம் என்று சொன்னோம் இல்ல அதையும் மீறி போயிருக்க நீ கேளும்மா என்று அம்மாவிடம் சொல்லுகிறார். தான் கேட்பதாக கோபி அம்மாவும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.