உதகை: பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து வங்கி கணக்குடன் (BANK ACCOUNT) இணைக்க வேண்டுமென மாவாட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் அறிவுறுத்தியுள்ளார்.
Collector’s Instruction to Farmers! Register their Aadhaar Number Online Immediately!
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அறிவித்துள்ளதாவது:
இந்தியாவில் விவசாயிகளின் நலன் கருதி பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து, ஆதார், வங்கி விவரங்கள், நில விவரங்களை பதிவேற்றம் செய்த பின்பு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் விவசாயிகளுடைய வங்கி கணக்கை அடிப்படையாக கொண்டு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்த வருடம் முதல் பதியப்பட்ட விவசாயிகளின் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்டு தவணை நிதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் தங்களின் ஆதார் எண்ணை பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து, வங்கிக் கணக்குடன் இணைத்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.
TODAY’S GOVERNMENT JOBS 2022:
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!
- வேளாண் பட்ஜெட் திட்டங்கள் : நடிகர் கார்த்தி வெளியிட்ட டுவீட்
- NIT திருச்சியில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! முழு விவரங்களுக்கு…
- Martyrs’ Day 23 March | தியாகிகள் தினம் | National Martyrs Day