தீபாவளி பண்டிகை கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டதால், வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்தனர். இந்நிலையில், இந்த பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக ரயில்வே நிர்வாகம் அதிக கூட்டம் காணப்படும் இடமான 8 ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டது.
பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக உயர்த்தப்பட்ட நடைமேடை டிக்கெட் கட்டணம் அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, பண்டிகை காலம் முடிவடைந்த நிலையில் சென்னை சென்டிரல், எழும்பூர் ,தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரயில் நிலையங்களில் உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் குறைக்கபப்ட்டுள்ளது. இந்த நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நேற்று அமலுக்கு வந்துள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
RECENT POSTS
- தமிழகத்திலே வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரியா நீங்க? இதோ உங்களுக்கான வேலை ரெடி? அப்ளை ஆன்லைன்..!
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!