மக்கள் நியாய விலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை மிக குறைந்த விலையில் வாங்குவதற்காக ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தமிழக அரசு குடும்ப அட்டை அதாவது ரேஷன் கார்டை வழங்கியுள்ளது. இந்த ரேஷன் காட்டுகள் குடும்பத்தின் வருமானத்தை பொறுத்து 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கோ, அல்லது ரேஷன் கார்டுகளில் உள்ள பெயர்களை நீக்கவோ அல்லது வேறு ஒரு பெயரை சேர்ப்பதற்காகவோ அருகில் இருக்கும் தாலுகா அலுவலகம் சென்று அங்கு விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது.
இந்த பணிக்காக மக்கள் இனி இவ்வளவு சிரமப்பட தேவையில்லை. ஒவ்வொரு மாவட்ட வாரியாக ரேஷன் கார்டுகளில் உள்ள பிழை திருத்துதல், புதிதாக பெயர் சேர்த்தல், ஏற்கனவே உள்ள பெயரை நீக்குதல் போன்றவற்றை செய்வதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மக்கள் சுலபமாக ரேஷன் கார்டை புதுபித்து கொள்ளலாம்.
அந்த வகையில், தற்பொழுது தமிழக அரசு இந்த சிறப்பு முகாமை சென்னையில் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகங்களில் மே 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற இருக்கிறது. ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யும் நபர்கள் இந்த சிறப்பு முகாம்கள் மூலம் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- நம்ப சென்னை பல்கலைக்கழகத்தில் புதிய பணியிடங்கள் அறிவிப்பு! மாதம் ரூ. 47000 சம்பளத்தில்! தாமதிக்காமல் சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
- விதவை பெண்களுக்கு மாசம் ரூ.1,500 தராங்களாம்..! அரசின் அட்டகாசமான அறிவிப்பு! உடனே அப்ளே பண்ணுங்க…
- திடீர் திருப்பம்! பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி? சற்றுமுன் வெளியான அதிர்ச்சி தகவல்!!
- சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..! ஜூன் 9 இதை செய்யணுமாம்!!
- மீண்டும் CMRL-சென்னை மெட்ரோ ரயில்வேயில் அட்டகாசமான வேலை! மாதம் ரூ.230000 சம்பளத்தில்! APPLY ONLINE at careers.chennaimetrorail.org