இன்று உலகம் முழுவதும் உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் உலக பணக்காரர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்ற செயலி என்றால் அது ட்விட்டர் செயலி தான். அந்த அளவிற்கு ட்விட்டர் செயலி மிகவும் பிரபலமான செயலியாக காணப்படுகிறது.
இந்த நிலையில் எலான் மஸ்க் என்பவர் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார். அதாவது அவர் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தின்போது இதை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கப்பட்டிருப்பதாக கூறபடுகிறது. எலான் மஸ்க் உலக பணக்கரார்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து அவர் பல்வேறு புதிய அம்சங்களை ட்விட்டரில் புகுத்திக் கொண்டே இருக்கிறார். மேலும் அவர் “ட்விட்டர் 2.0 தி எவ்ரிதிங் ஆப்” என்கிற திட்டங்களை கடந்த வருடம் வெளியிட்டார். அதில் புதிய சிறப்பு அம்சங்களாக நீண்ட வடிவ ட்வீட்கள், பணம் செலுத்துதல் மற்றும் என்கிரிப்டட் நேரடி செய்திகள்(DMs) போன்றவைகள் காணப்படும் என்றார். அதுமட்டுமல்லாது இவ்வசதிகள் அதிக பாதுகாப்பு தன்மையுடனும் பெரியளவு உதவியாகவும் ட்விட்டர் பயனர்களுக்கு காணப்படும். தொடர்ந்து வீடியோ மற்றும் ஆடியோ கால் மற்றும் அதனை சாட் செய்யும் புதிய வசதியை ட்விட்டரில் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார். அதனையடுத்து எலான் மஸ்க் இவ்வகையான புதிய அம்சங்களினால் உலகின் எந்த ஒரு மூலையிலிருந்தாலும் ஒருவருடன் எந்த தொலைபேசி எண்ணும் இல்லாமல் மிக எளிமையாக பேச முடியும்” என்று ஒரு ட்வீட்டின்போது தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக் ஆகியவைகளின் ஒரே அம்சங்களை கொண்டதாக ட்விட்டரில் உள்ள அழைப்பு அம்சம் காணப்படும். இதே போன்று மேலும் பல அம்சங்களை எலான் மஸ்க் அவர்கள் ட்விட்டரில் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!