தமிழ்நாட்டில் அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறைகளின் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் அந்தந்த பணிகளில் பணியமர்த்தப்படுவார்கள். இந்நிலையில், அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் குரூப்-1 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர்.
இந்நிலையில், இந்த தேர்வுகள் நடைபெற்று 5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். இந்தச் சூழலில் குரூப் 1 தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அனைவருக்கும் எங்கள் ஜாப்ஸ்தமிழ் குழுவினரின் வாழ்த்துக்கள்
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்
- Latest Govt Jobs 2023 | Government Jobs 2023 | Government Job Vacancies
- Defence Job Alert 2023 – Free Job Alert Defence – Latest Government Jobs in India
- TN Govt Jobs 2023 | Get the Latest Tamilnadu Government Job Alert 2023
- Railway Recruitment 2023 | இந்தியா முழுவதும் ரயில்வே வேலைவாய்ப்புகள்