சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகவும் அதிக மக்கள் பயன்படுத்தக்கூடியதாகவும் டுவிட்டர் செயலி இருந்து வருகிறது. டுவிட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் உலகின் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை இடம் அமெரிக்காவில் உள்ளது.
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதிலிருந்தே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில், டுவிட்டர் நிறுவனத்திலிருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்தது மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வைத்திருக்கும் ‘ப்ளூடிக்’ வசதிக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் கட்டணம் செலுத்தாத பிரபலங்களின் ‘ப்ளூடிக்’ வசதியை நீக்கியும் உள்ளார்.
இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தினார். அதில், நான் டிவிட்டரின் தலைமை பொறுப்பில் தொடரட்டுமா? வேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பலதரப்பினரும் எலான் மஸ்க்கை தலைமைப் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில், ட்விட்டரை மேலாண்மை செய்ய தலைமைச் செயல் அதிகாரி பணிக்கு புதிதாக ஆள் எடுத்துள்ளேன். அந்தப் பெண் 6 வாரங்களில் அவருடயை பணியைத் தொடருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!