காஞ்சிபுர ஓரகடத்தில் உள்ள தொழில் பயிற்சி நிலையத்தில் வரும் 31 ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்கை நடைபெறும் என்று மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். இதன்படி உரிய சான்றிதழ்களுடன் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம் உதவி மையத்தை அணுகவும்.
இதில், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பவியலாளர் கம்மியர் மின்னணுவியல், கம்மியர் மோட்டார் வாகனம், மெக்கானிக் எலக்ட்ரிக் வண்டி, மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் – ஆட்டோமேசன் மற்றும் (இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னிசியன்), அட்வான்ஸ்டு மிஷினிங் டெக்னிசியன் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 2 ஆண்டு கால பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், பிரிவிற்கு ஓராண்டு பயிற்சிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

அதன்பிறகு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் கற்றுகொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. அரசு உதவித்தொகையாக மாதந்தோறும் 750 ரூபாய், விலையில்லா சைக்கிள் மடிகணினி, தையற்கூலி, இலவச சேப்டி ஷூ, இலவச பஸ்பாஸ், இரண்டு செட் சீருடைக்கான துணி, போன்றவை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், ஒரகடம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9444621245, 8608728554, 8122374342.