வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையாவது:-
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாதந்தோறும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமை நடந்து கொண்டு இருக்கிறது.
அதன்படி, இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது, வரும் 26 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறப் போகிறது. இந்த முகாமில் பல்வேறு வகையான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு கணினி இயக்குபவர், மேலாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், கணக்காளர், ஏரியா மேனேஜர். டீம் லீடர், சூப்பர்வைசர், காசாளர், மெக்கானிக், சேல்ஸ் அசிஸ்ட்டென்டு, தட்டச்சர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., மற்றும் கணினியியல் (ஜாவா, டேலி) முடித்த ஆண்கள், பெண்கள் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
RECENT POSTS:
- இனி அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்.. பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு..!
- நர்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவை! தங்கும் வசதி வழங்கப்படும்! உடனே அப்ளை பண்ணுங்க!
- மீண்டும் ஓர் புதிய வாய்ப்பு! தமிழ்நாடு காவல் துறையில் வேலை அறிவிப்பு @ www.tn.gov.in | மாதந்தோறும் தமிழக அரசு சம்பளம் நீங்களும் வாங்கலாம்!
- 8th, Diploma படிச்சிருந்தால் போதும்! மாதம் 2,50,000 மேல் சம்பளத்தில் அரசாங்க வேலை ரெடியா இருக்கு! FDDI நிறுவனத்தில் வேலை அறிவிப்பு!
- புதுசா நிலம் வாங்க போறீங்களா..! இதோ உங்களுக்காக பட்ஜெட்டில் வெளியான அட்டகாசமான அறிவிப்பு!!