சென்னையில் இருந்து கோவைக்கு அதிவிரைவு ரயில் வந்தே பாரத் சேவையினை பிரதமர் மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பிரதமர் துவக்கி வைத்த வந்தே பாரத் ரயிலில் எம்எல்ஏக்கள், ரயில்வே அதிகாரிகள், டெல்லி மற்றும் சென்னை பத்திரிகையாளர்கள் பயணம் செய்தனர்.
சேலம் மற்றும் ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நூற்றுக்கணக்கானோர் புதிய ரயிலை மலர் தூவி வரவேற்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காணொளி காட்சி மூலம் நிகழ்ச்சியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர் ஐ. சரவணன், மாவட்ட துணை தலைவர்கள் ரமேஷ், ராஜேந்திரன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கௌதம், இளைஞர் அணி பொதுச் செயலாளர்கள் காளிமுத்து என்ற கவுதம், கலைச் செல்வன், பொருளாளர் ராசி எஸ்.கிரிதரன் உள் பட பலர் பங்கேற்று பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நேற்று இரவு 8.37 மணிக்கு சென்னை கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ஜங்ஷன் முதலாவது நடை மேடைக்கு வந்தது. அப்போது ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர். இதனை பார்த்த பிரதமர் தனது டிவிட்டர் பதிவில் “வந்தே பாரத் ரயிலுக்கு சேலத்தில் அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- Tamilnadu Government Jobs 2023 | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் | Unlock www.tn.gov.in Recruitment 2023 Notification | Grab Opportunities!
- 8,10,12-ஆம் வகுப்பு அரசு வேலைவாய்ப்புகள்! Government Jobs 2023!
- Central Government Jobs 2023 | மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் | Central Government Employment
- Employment News Tamil 2023 | இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் தமிழில் | Stay avid of the Competition with Latest News
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!