கடந்த 1965 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி இந்திய எல்லைகளை பாதுகாப்பதற்காக எல்லை பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. இந்திய நாட்டின் சர்வதேச எல்லைகளை பாதுகாப்பதில் இப்படை முக்கிய பங்காற்றி வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந்தேதி எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட செய்திகுறிப்பில், இந்திய எல்லை பாதுகாப்புப் படை உருவானதன் 49-வது எழுச்சி தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நமது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தினத்தன்று நான் நமது வீரர்களை வணங்குகிறேன்.
நம்மை அமைதியாக வாழ செய்ய அவர்கள் எல்லையில் கடுமையான பணியை மேற்கொள்கின்றனர். அவர்களது அயராத உழைப்பும் பண்பும் அவர்களை எப்போதும் உயர்ந்த இடத்தில் வைத்து பார்க்கவும், நம்மை ஊக்குவிப்பதாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயற்கை பேரழிவுகள் போன்ற சவாலான சூழ்நிலைகளின் போது எல்லை பாதுகாப்புப் படையினர் மேற்கொள்ளும் உன்னதமான பணியை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
RECENT POSTS
- தமிழகத்தில் 12வது படித்தவர்ளுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை! மாதம் இருபது ஆயிரம் சம்பளம் வாங்கலாம்! APPLY ONLINE NOW
- Find Your Dream Job in Railways with KMRC Recruitment 2023 – Apply for 125 Rail Vacancy…
- மாதம் ரூ.64000 சம்பளத்துடன் மத்திய அரசாங்க வேலை! டைரக்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஈஸியா வேலையில் சேருங்க!
- Latest Announcement for 322 Vacancies in Tamil Nadu Government Jobs 2023 @ Apply Online | Don’t Miss Out
- Job Opportunities for IPPB Recruitment 2023 are 41 Positions Available @ www.ippbonline.com | Apply Online