தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி நிலையில் கனமழை பெய்தது. கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில் பெரிய அளவில் மழை ஏதும் பெய்யவில்லை. இதையடுத்து தற்பொழுது மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாக மாறியுள்ளதாகவும் இன்று மாலைக்குள் தாழ்வு மண்டலமாக மாறி நாளைக்குள் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தாழ்வு மண்டலமானது வலுபெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு வருகிற 8 ஆம் தேதி ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்துள்ளது. எனவே, தமிழகத்தில் நாளை முதல் கனமழை தொடங்கும் என்றும் நாளுக்கு நாள் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஈயவு மையம் தெரிவித்துள்ளது.
RECENT POSTS
- HCL Recruitment 2023 – Apply Online for 24 Senior Manager, Management Trainee Vacancy – Registration Link Available!!!
- IITRAM Recruitment 2023 – Office Executive Jobs | No Application Fee – Online Application Open Till 16/02/2023!!!
- CMRL Recruitment 2023 – Walk in Interview for General Manager Jobs – Salary Rs.2,25,000/-PM | Apply Either Online or Offline…
- RailTel Recruitment 2023 – Senior Manager Jobs | Personal Interview Only – Apply now at railtelindia.com…
- IIT BHU Recruitment 2023 – Apply Now for Junior Assistant & Registrar Jobs | 65 Posts – Apply Online at old.iitbhu.ac.in…