இந்தியாவில் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு “சாகர்மாலா” என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனத்தின் மூலம் மாநிலங்களுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே பயணிகள் கப்பல்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது சென்னை துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எம்பிரஸ் என்ற பெயரில் இயங்கும் இந்த பயணிகள் சொகுசு கப்பலை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கப்பல் சென்னையில் தொடங்கி இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா திரிகோணமலை மற்றும் காங்கேசன் ஆகிய மூன்று துறைமுகங்களை இணைக்கும் வகையில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சொகுசு கப்பலில் 11 மாடிகள் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதில் சுமார் 1,600 பயணிகள் வரை பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் போல் ஏராளமான அறைகளும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கப்பலின் எந்த இடத்திலிருந்து பார்த்தாலும் கடலின் அழகை ரசிக்கும் அளவிற்கு கப்பல் முழுவதும் கண்ணாடி சுவர்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- உங்களுக்கு வேலை செஞ்ச அனுபவமே இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான சம்பளத்துல 30 காலியிடங்கள் இருக்கு! Apply Now!
- மொத்தம் 50 காலியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க! முன் அனுபவம் இல்லாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!
- நம்ம சேலத்துல புதிய வேலை அறிவிப்பு! 10 காலியிடங்களை அறிவிச்சிருக்காங்க! உடனே விண்ணப்பியுங்க!
- பிரஷர்ஸ்க்கு 50 காலியிடங்கள் இருக்கு! சூப்பரான சம்பளம்! சூப்பரான வேலை! தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்!
- தனியார் வேலை செய்ய உங்களுக்கு ஓகே வா? அப்ப இந்த புதிய வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்!