மறைந்த சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் அறிவிப்பு!

மறைந்த சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு - முதல்வர் அறிவிப்பு
மறைந்த சங்கரய்யாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கிடைக்காமல் போனதற்கு குறுகிய மனம் படைத்த சிலரது சதி என்று வேதனை தெரிவித்து உள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில் கூறியது:

” தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் மறைந்த செய்தியை கேட்டு தான் துடிதுடித்து போனதாக கூறினார். சங்கரய்யா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் கூடிய விரைவில் நலம் பெற்று விடுவார் என்று நம்பி இருந்தேன். ஆனால் அவர் மறைந்த செய்தி எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் அளித்தது.

சங்கரய்யா அவர்கள் அவர் இளம் காலம் தொட்டு 102 வயது வரை பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் அர்ப்பணித்தார். அவரது வாழ்க்கையும், தியாகமும் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

மேலும் அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவராக இருந்தபோதே விடுதலை வேட்கையோடு மாணவர் சங்க செயலாளராக போராட்டங்களை தொடங்கினர். அவரது போராட்டத்திற்காக பலமுறை சிறையில் அடைக்கப்பட்டு அதனால் படிப்பை துறந்தார். அதோடு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க 12 மணி நேரத்துக்கு முன்னர் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். மேலும் இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரருக்கு 2021-ஆம் ஆண்டு விடுதலை நாளினை முன்னிட்டு தான் நேரில் சென்று முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்கியது எனக்குக் கிடைத்த வாழ்நாள் பேறு! என்றார் முதல்வர் ஸ்டாலின். அதோடு சங்கரய்யா அவர்கள் தனக்கு விருதோடு கிடைத்த பெருந்தொகையை கூட கொரோனா நிவாரண நிதிக்காக அரசுக்கே அளித்தவர். அவரது அந்த மாண்பு மிகுந்த செயலால் நெகிழ்ந்து போனேன் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தோழர் சங்கரய்யா அவர்கள் ஒரு சிறந்த சட்டமன்ற உறுப்பினராக பல நல்ல பணிகளை மக்களுக்கு செய்து உள்ளார். மேலும் அவர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக விளங்கியவர். அதோடு டாக்டர் கலைஞர் அவர்கள் நிறைவுற்றபோது சங்கரய்யா அவர்கள் கலைஞரின் இறுதி பயணத்தை கண்டு கண்கலங்கிய காட்சி இருவருக்குமான நட்பை பறைசாற்றியது!

சங்கரய்யா அவர்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இருந்து அவர் நடத்திய போராட்டங்கள் மற்றும் தீக்கதிர் நாளேட்டின் முதல் பொறுப்பாசிரியர் போன்ற பல்வேறு பொறுப்புகளில் ஆற்றிய செயல்பாடுகளும் தமிழ்நாட்டின் பொதுவுடைமை இயக்க வரலாற்றில் அவரது தவிர்க்க முடியாத ஆளுமையை வெளிக்காட்டும்.

ALSO READ : இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: காசா மருத்துவமனையில் நுழைந்த இஸ்ரேல் படையினர்!!

இந்த ஆண்டு ஜூலை 15 அன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மூலமாக பொது தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் நான் அறிவித்தேன். ஆனால் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நிறைவேறாமல் போனதை எண்ணி இந்த வேளையில் மனம் வருந்துகிறேன்.

தோழர் சங்கரய்யா அவர்கள் தகைசால் தமிழர் முனைவர் மட்டுமல்ல அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதி வாய்ந்த போராளியும் கூட என்றார் முதல்வர். அதோடு சிறப்புகளுக்கு அவரால் சிறப்பு என்று சொல்லத்தக்க அப்பழுக்கற்ற தியாக வாழ்வுக்குச் சொந்தக்காரர் சங்கரய்யா. அவரது இழப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அதோடு அவரது அனுபவமும், வழிகாட்டலும் இன்னும் சில ஆண்டுகள் கிடைக்கும் என்று நம்பி இருந்த வேளையில் அவரது மறைவு தனிப்பட்ட முறையிலும் பேரிழப்பு.

மேலும் சாதி, வர்க்கம், அடக்குமுறை, ஆதிக்கம் போன்றவற்றிற்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட வீரராக சட்டமன்ற உறுப்பினராக அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் வகையில் சங்கரய்யாவின் திருவுடலுக்கு அரசு மரியாதை உடன் பிரியாவிடை அளிக்கப்படும் ” என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறினார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்