சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகனங்களில் அனைத்து கோவில்களிலும் கோவில் நடையும் அடைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தற்பொழுது வர இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 8 ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுவதால் அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நடை அடைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சந்திர கிரகணதை முன்னிட்டு காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை கோவில் நடை அடைக்கப்படும் என்றும் 8 ஆம் தேதி காலை 7 மணியளவில் அன்னாபிஷேகம் நடைபெற்று பின்னர் கோவில் நடை சாத்தப்படும். மேலும், இரவு 7.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர கிரகணதை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த 22 உபகோவில்களில் இதே நேரத்தில் நடை அடைக்கப்படும். மேலும் நவம்பர் 7 ஆம் தேதி 108 திருவிளக்கு பூஜை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
RECENT POSTS
- தமிழகத்திலே வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரியா நீங்க? இதோ உங்களுக்கான வேலை ரெடி? அப்ளை ஆன்லைன்..!
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!