சென்னை ஊர்காவல் படையில் சேர சைதாப்பேட்டை போலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள ஊர்காவல் படை தலைமை அலுவலகத்திற்கு விண்ணப்ப மனுக்களை அனுப்பலாம். விண்ணபங்களை நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம். மேலும், இந்த விண்ணபங்களை 31-08-2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவல் படையில் சேர 50 வயதுக்குள் இருக்கும் தகுதி உள்ள ஆண்கள், பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும், குறைந்தபட்ச கல்வி தகுதி 10 ஆம் வகுப்பு அதில் தேர்சி பெறாவிட்டாலும் பரவா இல்லை. அதன்படி, சென்னையில் வசிக்கவேண்டும் மற்றும் ரேஷன் அட்டை வைத்திருக்க வேண்டும்.
ALSO READ : பும்ரா > சுதந்திரமாக களத்தில் விளையாட வேண்டும்!
அதன்பிறகு, தேர்ச்சி பெற்ற ஆண்களை போலீசாருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணி மற்றும் பகல், இரவு ரோந்து பணிகளில் அமர்த்தப்படுவார்கள். தேர்ச்சி பெற்ற பெண்களை பகல் ரோந்து பணி மட்டுமே ஒதுக்கப்படும். மேலும், பெண்கள் ரோந்து பணியில் ஈடுபடுவோருக்கு 560 சிறப்பு படியாக வழங்கப்படும் என்று ஊர்க்காவல் படை தலைமை அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.