தமிழகத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா உள்ளிட்ட பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
வடகிழக்கு பருவமழை தொடக்கத்தால், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவுவதால் இன்று (31/10/2022) முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் வலுபெற உள்ளதால், வரும் 4-ம் தேதி வரை தமிழத்தில் அதிக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். நாளை தமிழகம் மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
RECENT POSTS
- பிரைவேட் கம்பெனியில வேலை ரெடி! அப்ளை பண்ண நீங்க ரெடியா? தமிழகத்திலே வேலை செய்யலாம்!
- டிப்ளமோ முடிச்சிட்டு தனியார் நிறுவனத்துல வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வேலை உங்களுக்குத்தான்!
- ரேஷன் கார்டு வச்சிருக்க குடும்பத்துக்குத்தான் இந்த செய்தி! இத உடனே செய்யணுமாம்..!
- கோயம்புத்தூரில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை! பத்தாவது படிச்சிருந்தாலே போதுமாம்!
- தனியார் நிறுவனத்தில் வேலை தேடும் நபரா நீங்கள்? இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு!