இந்திய விவசாயிகள் தினம் டிசம்பர் 23 – National Farmers Day December 23 2019 விவசாயம் செய்யும், மனதால் விவசாயம் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் விவசாயிகள் தின நல்வாழ்த்துகள். 🔰இன்று விவசாயிகள் தினம்.
*உலக அளவில் உணவுத்தட்டுபாடு கடுமையாக ஏற்பட்டிருக்கும் இன்றைய நிலையில் எதிர்காலம் விவசாயிகள் கையில் என்பதை வலியுறுத்தியும் உணவு பாதுகாப்பை வலியுறுத்தியும் டிசம்பர் 23ம் தேதி விவசாயிகள் தினமாக கொண்டாப்படுகிறது*
🙂 இந்தியாவின் மறைந்த பிரதமர் சரண்சிங் பிறந்த தினமே விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
🙂 இவர் 1979 முதல் 1980 வரை பிரதமர் பதவி வகித்தார்.
இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது. பயிர் சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன பண்ணைக் கருவிகள், மகசூல் அதிகரிக்கும் விதைகள் என்று நாளுக்கு நாள் விவசாயத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகிறது. பசுமை புரட்சியின் பாதிப்புகள் மண் வளத்தை நஞ்சாக்கி இருந்தாலும், விவசாயிகள் தொடர் உழைப்பால், ஆண்டுக்கு 265 மில்லியன் டன் உணவு பொருட்களை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்து வாழ்கிறார்கள்*
❗ இன்று விவசாயி என்றால் பிளைக்க தெரியாதவன் என்பதாக இளைஞர்கள் மத்தியில் எண்ணமிருக்கிறது.
🙂 ஒரு காலத்தில் உலகத்துக்கே உணவளித்த நம் தேசம் இன்றைக்கு பருப்புக்கும் அரிசிக்கும் அந்நிய தேசங்களை நம்பி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
🔰 நீர் நிலைகளை நில ஆக்கிரமிப்புகள் சாப்பிட்டு விட்டன. நதிகள், தொழிற்சாலை கழிவுகளை சுமக்கும் சாக்கடைகளாக மாறி இருக்கின்றன.
🔱ஆறுகள், அரசு ஆதரவுடன் மணற்கொள்ளை நடக்கும் இடமாக இருக்கிறது.
🔆 உணவுப் பொருட்களின் விலை உச்சத்துக்கு உயர்ந்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை.
விவசாயிகளுக்கு அவர்களின் நிலம்தான் தாய் அதில் விளையும் பயிர்கள்தான் அவனின் குழந்தைகள் என்றால் மிகையாகாது
✅ நிலம் மற்றும் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மனதளவில் பொருளாதார ரீதியில் தாங்கிக் கொள்ள முடியாததாக இருக்கிறது.
☸ இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத் தரம், கல்வித் தரம் உயர்த்தப்பட்டால் அவன் முன்னை விட அதிகமாக துடிப்பாக விவசாயம் செய்து நம்மை எல்லாம் காப்பாற்ற முடியும்.
CIPET மத்திய அரசு நிறுவனத்தில் பணிகள்
♈ தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 130 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு இருக்கிறது.
💙 இதில், 51 லட்சம் ஹெக்டேரில் விவசாயம் செய்யப்படுகிறது.
❤ தமிழக மக்களில் சுமார் 55 சதவிகிதம் பேர் (3 கோடி பேருக்கு மேல்) விவசாயம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
✅ பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி தொடங்கி, அறு வடை வரை அனைத்தையும் கடன் வாங்கித்தான் செய்து வருகிறார்கள்.
🔰 கடன் கிடைக்காத நிலையில் வீட்டிலுள்ள பொருட்கள், மனைவி, மகள்களின் நகைகளை
விற்று அல்லது அடமானம் வைத்துதான் விவசாயம் செய்து வருகிறார்கள்.
😔 இப்படி கஷ்டப்பட்டு விவசாயம் பார்த்தாலும் மழை, புயல், பூச்சி தாக்குதல் ஏற்பட்டால் அவன் வருமான ஆதாரம் மண்ணோடு மண்ணாகி விடுகிறது.
🔰 இப்படிப்பட்ட நேரத்தில் கை கொடுக்க தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டம்
இருக்கிறது.
🔰இந்த இன்ஷூரன்ஸ் திட்டம்
பற்றி பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாத நிலை இருக்கிறது.
🔰இந்த இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை விவசாயிகள் 100 சதவிகிதம் கட்ட
வேண்டியதில்லை. விவசாயிகள் 50%, தமிழக அரசு 45%, மத்திய அரசு 5%
கட்டுகிறது.
🔰மேலும், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால் அவற்றுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் கோயம்புத்தூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், ஈரோடு, தேனி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
🔰இது போன்ற வசதிகள் இருப்பதை விவசாயிகளுக்கு எடுத்துச் சொல்வது மேலும் விவசாயம் சம்பந்தபட்ட சந்தேகங்கள் உத்திகள் போன்றவற்றை வழங்கி விவசாயத்தையும் விவசாயிகளையும் மீட்டு வாழ்க்கை தரம் உயர்த்துவதோடு நாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணை நிற்பது நம் அனைவருக்கும் முக்கிய கடமையாக இருக்கிறது. National Farmers day December 23
விவசாயிகளை தேசத்தின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்திஜி
இன்றைய தேதியில் விவசாயிகள் தினத்தில் மட்டும்தான் அந்த முழுகெலும்பை தேசம் திரும்பி பார்க்கிறது.