திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 2 ஆம் படை வீடாக உள்ளது. இந்த கோவிலுக்கு அருகே கடல் உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த கடலில் வந்து நீராடி செல்வது வழக்கம்.
இந்த கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். திருச்செந்தூர் கோவிலுக்கு அருகே இருக்கும் இந்த கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் அவ்வபோது கடல் உள்வாங்குவது வழக்கமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி பவுர்ணமி என்பதால் நேற்று காலையில் இந்த கோவிலுக்கு அருகே உள்ள கடலானது சுமார் 100 அடிக்கு உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதால் அதில் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இதனை பார்க்க்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க ரேஷன் கார்ட பத்திரமா வச்சுக்கோங்க..!
- மத்திய அரசாங்க வேலை செய்ய ரெடியா இருங்க! நேரடி நேர்காணல் முறையில் வேலைவாய்ப்பு வெளியீடு!
- பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப முடிவு! AAICLAS லிமிடெட்டில் வேலை! மிஸ் பண்ணாதீங்க!
- நீங்கள் எதிர்ப்பார்த்த வேலை வந்துவிட்டது! RITES நிறுவனத்தில் புதியதோர் வேலை வெளியீடு!
- தமிழகத்தில் பணிபுரிய ஓர் அறிய வாய்ப்பு! திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை அறிவிப்பு!