பொதுமக்கள் தங்கள் ஊரில் செயல்படும் ரேஷன் கடைகளின் மூலம் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மிக குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். அரிசி, பருப்பு, கோதுமை போன்ற ரேஷன் பொருட்கள் மக்களுக்கு மாதம் மாதம் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க செல்லும்பொழுது அன்றைய நாளில் ரேஷன் கடைகள் செயல்படுகிறதா? இல்ல இல்லையா? என்பதை அறிந்து கொள்வதற்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சிவில் சப்ளை துணை ஆணையர் சண்முகவேலு தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள் இயங்குகிறதா? இல்லையா? என்பதை இனி மக்கள் SMS மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு ரேஷன் அட்டைதாரர்கள் அவர்கள் பதிவு செய்யப்பட எண்ணிலிருந்து 9773904050 என்ற எண்ணுக்கு PDS 102 என்று SMS செய்தால் அன்றைய நாள் ரேஷன் கடை திறந்துள்ளதா? அல்லது மூடியுள்ளதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல், 9773904050 என்ற எண்ணுக்கு PDS 101 என்று SMS செய்தால் ரேஷன் கடையில் என்ன பொருட்கள் உள்ளது என்ற விவரம் கிடைக்கும்.
இந்த புதிய வசதி மூலம் மக்கள் இனி சிரமப்படாமல் வீட்டிலிருந்தே ரேஷன் கடை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலை வேணுமா? கிளெர்க் வேலை வேணுமா? தமிழ்நாடு அரசு அட்டகாசமான வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!
- 10வது படித்தவர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு வேலை வந்தாச்சு! இன்னைக்கே அப்ளை பண்ணிடுங்க!
- ஆபீஸ் அசிஸ்டன்ட், கிளெர்க், ரிசப்ஷனிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலைக்கு தமிழக அரசில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
- பல்வேறு பணியிடங்களை வெளியிட்டுள்ளது பெல் நிறுவனம்! நேர்காணலில் மத்திய அரசு வேலை ரெடி!
- கவர்மெண்ட் வேலை பாக்குற உங்களுக்குத்தான் இந்த மகிழ்ச்சியான செய்தி! சம்பளம் அதிகமா தராங்களாம்!