தமிழகத்தில் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், நவம்பர் 1 ஆம் தேதி (இன்று) உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வார்டு சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றும் இவற்றில் கோவையில் மட்டும், நூறு வார்டுகளில் 846 இடங்களில் மக்கள் சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கோவையில் திமுக ஆட்சியில் சாலை பணிகள் தொடங்கப்பட்டு சில இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது இதில் சிறப்பு நிதியாக ரூ. 200 கோடி நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், ரூ.26 கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு உள்ளது. அதுமட்டுமல்லாமல் பருவமழை முன்னெச்சரிக்கையாக ஒன்றரை லட்சம் மின்வாரிய ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
RECENT POSTS
- தமிழகத்திலே வேலை தேடிக்கொண்டிருக்கும் பட்டதாரியா நீங்க? இதோ உங்களுக்கான வேலை ரெடி? அப்ளை ஆன்லைன்..!
- தனியார் நிறுவனத்தில வேலை செய்ய சூப்பர் ஜான்ஸ்! தமிழகத்தில் நீங்க எங்க வேண்டுமானாலும் வேலை செய்யலாம்!
- பிரைவேட் கம்பெனியில வேலை தேடுறீங்களா? அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
- ரூபாய் 40,000 – 50,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் அசத்தலான வேலைவாய்ப்பு @ www.annauniv.edu
- IIT மெட்ராஸில் புதிய வேலைகள் அறிவிப்பு! மாதம் ரூ.35000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்!