பொதுமக்களின் பயணங்களை எளிதாக்கவும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைந்து செல்வதற்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அந்த வகையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடைய ரயிலானது நேற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை வருவதற்காக புறப்பட்டது. இந்த ரயிலானது நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டிருந்தது.
அப்பொழுது பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன.
இதையடுத்து, ரயில்களின் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி பெருத்த சேதம் அடைந்தன. இந்த விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், இந்த விபத்தானது நாட்டையே உலுக்கி போட்டுள்ளது. வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துக்களில் இது ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த கோர விபத்துக்கு தமிழக முதலமைச்சர் போன்ற பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்களை தெரிவித்துள்ளனர்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- உங்களுக்கு வேலை செஞ்ச அனுபவமே இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான சம்பளத்துல 30 காலியிடங்கள் இருக்கு! Apply Now!
- மொத்தம் 50 காலியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க! முன் அனுபவம் இல்லாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!
- நம்ம சேலத்துல புதிய வேலை அறிவிப்பு! 10 காலியிடங்களை அறிவிச்சிருக்காங்க! உடனே விண்ணப்பியுங்க!
- பிரஷர்ஸ்க்கு 50 காலியிடங்கள் இருக்கு! சூப்பரான சம்பளம்! சூப்பரான வேலை! தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்!
- தனியார் வேலை செய்ய உங்களுக்கு ஓகே வா? அப்ப இந்த புதிய வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்!