
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் எத்தனையோ செயலிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும் இவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக இருப்பது வாட்ஸ் செயலிதான். பயனாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வாட்ஸ் அப் செயலியில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக நாளுக்கு நாள் வாட்ஸ் அப் செயலி பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கூடுதல் பாதுகாப்பு வசதி அதாவது Privacy Checkup என்னும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் அப் கணக்கிற்கு தேவையான பாதுகாப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும்.
ALSO READ : அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டணம் 50% உயர்வு..! பேரதிர்ச்சியில் மாணவர்கள்!!
புதிதாக அறிமுகப்படுத்திய அப்டேட்டில், வாட்ஸ் மூலம் நீங்கள் விரும்பும் பயனார்கள் மட்டும் உங்களை தொடர்பு கொண்டு உங்களுடன் பேசும் முடியும் என்பதை நீகளே தேர்வு செய்து கொள்ளலாம். எந்தெந்த பயனாளர்களுக்கு last seen, Status தெரிய வேண்டும் என்பதையும் நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், குறிப்பிட்ட நேரத்தில் உங்களது செய்தி பயனர்களுக்கு சென்றடையும் வகையில் Timer வசதியும், குறிப்பிட்ட நபரின் சேட்டை உங்களால் Finger Print மூலமாக லாக் செய்யும் வசதி உள்பட ஏராளமான பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ் அப் வெள்ளியிட்டுள்ளது.