பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகோள்!!

ராமதாஸ் வேண்டுகோள்
ராமதாஸ் வேண்டுகோள்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்த்தில் படித்து முடித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்காமல் தாமதம் செய்வதை கண்டித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதோடு பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு தற்காலிக பட்டங்களை வழங்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:

” கடந்த 2022-23 ஆம் ஆண்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் (Consolidated marksheet) தற்காலிக பட்டச் சான்றிதழும் (Provisional Certificate) நிர்வாகத்திடம் இருந்து வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதோடு மொத்தம் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சம் அதில் சில பாடப்பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இந்த சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இவ்வாறு படிப்பை முடித்த மாணவர்களுக்கு அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் – மே மாதங்களில் பட்டப்படிப்புக்கான தேர்வுகள் நடந்து முடிந்தது. அதோடு அதற்கான முடிவுகளும் ஜூன் மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் வெளியான ஒரு சில நாட்களில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிக பட்டச் சான்றிதழும் மாணவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது 6 மாதங்கள் ஆகியும் சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படவில்லை. அதோடு அதற்கான காரணங்களும் தெரிவிக்கவில்லை. மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் தாங்கள் சான்றிதழ்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டோம் என்றும், கல்லூரி நிர்வாகங்கள் தான் சான்றிதழ்களை வழங்கவில்லை என்று கூறினார். ஆனால் கல்லூரி நிர்வாகங்கள் இன்னும் தங்களுக்கு சான்றிதழ்களே வரவில்லை என்று கூறுகின்றனர். இதில் எது உண்மை என்றே தெரியவில்லை.

ALSO READ : தமிழ்நாடு அரசின் புதிய அரசாணை! சிறு, குறு நிறுவனங்களுக்கான பீக் அவர்ஸ் மின்கட்டணம் குறைப்பு!

பட்டப்படிப்பை முடித்த பெருபாலான மாணவர்கள் உயர்கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் சில மாணவர்கள் பணிக்கு செல்வதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளனர். மேலும் தற்காலிக பட்டச் சான்றிதழ் இல்லாததால் உயர்கல்வி படிக்கவும், வேலைகளில் சேரவும் வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதோடு கிட்டத்தட்ட 50 ஆயிரம் குடும்பங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சிலரின் அலட்சியத்தால் பாதிக்கப்படுகின்றன. மேலும் இந்த தாமதத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதைக் அறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்கல்விக்காக தற்காலிக பட்டச் சான்றிதழ் இல்லாமல் தனித்தனியான மதிப்பெண் சான்றிதழ்களின் அடிப்படையில் சேர்ந்த மாணவர்கள் அவர்களின் தற்காலிக பட்டச் சான்றிதழை அடுத்த 6 மாதங்களில் தாக்கல் செய்யாவிட்டால் அவர்களின் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. எனவே, பட்டப் படிப்பை முடிந்தது தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தற்காலிக பட்ட சான்றிதழை வழங்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் அறிவித்து உள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்