இந்தியாவில் மத்திய அரசானது தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 7 – வது ஊதிய குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் 4 % சதவீதமாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் நடப்பு ஆண்டு துவங்கியவுடனேயே விலைவாசியை அடிப்படையாகக்கொண்டு தனது முதற் கட்ட வேலையாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதனையடுத்து 31% லிருந்து 35% வரை கர்நாடக அரசானது தனது ஊழியர்களுக்குரிய அகவிலைப்படியை 4% மாக அதிகரித்தது. மேலும் 01.01.2023 தேதியைக் கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வானது கணக்கிடப்படுவதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4% மாக அதிகரித்திருக்கிறது. இதனை 01.04.2023 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். தொடர்ந்து ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 4% மாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹரியானாவில் 38% சதவிகிதமாக இருந்த அகவிலைப்படியானது தற்போது 4% மாக அதிகரித்து 42% என உயர்த்தப்பட்டிருக்கின்றது. மேலும் ஜார்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 34% சதவீதமாக அதிகரித்துள்ளனர். இது நடப்பு ஆண்டான ஜனவரி மாதத்தினுடைய 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதாக கூறப்பட்டிருக்கின்றது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- உங்களுக்கு வேலை செஞ்ச அனுபவமே இல்லையா? கவலைய விடுங்க! சூப்பரான சம்பளத்துல 30 காலியிடங்கள் இருக்கு! Apply Now!
- மொத்தம் 50 காலியிடங்களுக்கு உடனே விண்ணப்பியுங்க! முன் அனுபவம் இல்லாத ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்க முடியும்!
- நம்ம சேலத்துல புதிய வேலை அறிவிப்பு! 10 காலியிடங்களை அறிவிச்சிருக்காங்க! உடனே விண்ணப்பியுங்க!
- பிரஷர்ஸ்க்கு 50 காலியிடங்கள் இருக்கு! சூப்பரான சம்பளம்! சூப்பரான வேலை! தமிழ்நாட்டிலேயே வேலை செய்யலாம்!
- தனியார் வேலை செய்ய உங்களுக்கு ஓகே வா? அப்ப இந்த புதிய வேலை அறிவிப்புக்கு விண்ணப்பிக்க விரையுங்கள்!