கடந்த ஆண்டு உக்ரைனில் நடைபெற்ற போர் காரணமாக உக்ரைனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சமையல் எண்ணெயில் பாதுப்பு ஏற்பட்டதால் இந்தியாவில் சமையல் எண்ணெயின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தது. இந்நிலையில், தற்பொழுது உக்ரைனில் இருந்து சப்ளை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் சமையல் எண்ணெயின் விலை சற்று குறைந்துள்ளது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், சோயாபீன்ஸ் எண்ணெய் விலை தற்பொழுது 46 முதல் 57 சதவீதம் வரை குறைந்ததுள்ளது. இதுகுறித்து மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் கூறுகையில், சமையல் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவை நுகர்வோருக்கு விரைவாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் எனவும் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்துள்ளது நுகர்வோருக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த சமையல் எண்ணெய் விலை குறைப்பு பற்றி மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலாளர் முன்னணி தொழில்துறை பிரதிநிதிகளுடன் ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். இதன் காரணமாக சமையல் எண்ணெயின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வளவு? லிட்டர் ரேட் நிலவரம் இதோ…!
- பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை செய்ய விருப்பம் உள்ளவரா நீங்க? இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்!
- CSIR மெட்ராஸ் காம்ப்ளக்ஸில் வேலை! இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! வேலையில ஜாயின் பண்ணுங்க!
- CSPDCL Recruitment 2023: Apply for 429 JE and AE Vacancies with Salaries up to Rs. 1,44,300/- PM
- ஈஸியா ஆன்லைன்ல அப்ளை பண்ணலாம் வாங்க! மதுரை காமராஜர் பல்கலையில் புதியதோர் வேலை அறிவிப்பு!