தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு வகையான தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த வருடம் 24/07/2022 அன்று குரூப் 4 எழுத்துத்தேர்வினை TNPSC நடத்தி முடித்தது. இந்த தேர்விற்கு 22,02,942 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். 18,36,535 மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்று தேர்வை எழுதி முடித்தனர். இதற்கான முடிவுகளை தேர்வர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டில் நடந்து முடிந்த GROUP 4 தேர்வு முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்வர்கள் அனைவரும் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில்… தற்போது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வருகிற மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும், தேர்வு முடிவுகள் பற்றி வெளிவரும் ஆதாரமில்லாத தகவல்களை தேர்வர்கள் நம்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அறிவித்துள்ளார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- டைரக்ட் வாக்-இன் இன்டர்வியூ! CECRI காரைக்குடியில் புதிய வேலை! இந்த மத்திய அரசு வேலையில ஜாயின் பண்ண ரெடியா?
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவில்லை..! அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த விளக்கம்!!
- தந்தையின் மரணம் : ரசிகர்களுக்கு அஜித் விடுத்த வேண்டுகோள்
- கடைசி தேதிக்கு இன்னும் சிறிது நாட்கள்தான் இருக்கு!! அதுக்குள்ள சீக்கிரமா இந்த வேலையை முடிங்க!
- ஆசிய கோப்பை போட்டி : இந்திய அணி பற்றி வெளியான புது தகவல்