கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் பல்வேறு தேர்தல் அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. அதில், மகளிருக்கு இலவச பேருந்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 போன்ற பல்வேறு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் எப்பொழுது அமல்படுத்தப்படும் என்று அனைவரும் எதிபார்த்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அதற்கான அதிகார்வபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.
கடந்த மாதம் நடைபெற்ற தமிழக பட்ஜெட்டில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அறிவித்தார். இந்நிலையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனை கிராமத்தில் பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு, பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
அப்பொழுது பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் தமிழக அரசு மக்களின் நலனை காக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் மகளிருக்கான உரிமை தொகை மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- ChatGPT பத்தி தெரியுமா உங்களுக்கு? ஒரே மாதத்தில் 1 பில்லியன் பயனார்களை ஈர்த்து சாதனை! வெளியான புதிய தகவல்…
- பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள்..! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!
- 12வது படிச்சவங்களா? விமானத்தில் பறந்துக்கிட்டே வேலைபார்க்கலாம்…
- திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த வாகனத்திற்கு அனுமதி கிடையாது!!