அடுத்த 3 மணி நேரத்தில் மழையா? 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்

Will it rain in the next 3 hours Warning-Meteorological Center for 11 districts-Rain Update Details

தமிழகத்தில் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்றைய நிலவரப்படி, அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்ட நிலையில், அம்மாவட்டங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அவற்றில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நீலகிரி, கரூரில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here